படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் இளைய தலைமுறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.29 – ‘பிடே’ கேண்டி டேட்ஸ் பன்னாட்டு சதுரங்க (செஸ்) போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் வாகையர் பட்டம் வென்றார்.

இதன் மூலம் கேண்டி டேட்ஸ் வாகையர் பட்டப் போட்டியை (செஸ் சாம்பி யன்ஷிப்பை) இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.
இதன் மூலம் உலக வாகையர் பட்டப் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், கேண்டிடேட்ஸ் தொடரில் வாகை யர் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் 75 லட்ச ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுமூகு வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

“மிக இளம் வயதில் ‘பிடே’ கேண் டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும் பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத் தொகை யையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கு வித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட் டுகள்.

இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங் கள் உடலையும் மனதையும் விழிப் புடனும் சுறுசுறுப்பாகவும் வைத் துக் கொள்ள அது உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *