புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்த நாள் இன்று (29.4.2024) கொண் டாடப்படுகிறது. இந்நிலையில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”
“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!”
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திரா விட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.