முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் பதிவிட்ட நபர் கைது

viduthalai
1 Min Read

கொச்சி ஏப் 28 முகநூலில் தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனப் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் தேதி தொடங்கி ஜுன் 1 ஆம் தேதி வரை நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் நடைபெற்றது. வரும் 7 ஆம் தேதி 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 26 ஆம் தேதி கேரளாவில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரளாவில் 71.16 சதவிகித வாக்குகள் பதிவாகின. கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (வயது 51) ‘தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காவல்துறையினர் முகமது சஜி மீது வழக்குப்பதிவு அவரை நேற்று (27.4.2024) கைது செய்துள்ளார்னர்.பிறகு கைது செய்யப் பட்ட சஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *