தமிழ்நாட்டில் இயல்பைவிட 83 விழுக்காடு மழை குறைவு!

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ, ஈரோட்டில் 4.5 ஆகவும், கன்னியாகுமரியில் 55.5 ஆகவும், காரைக்காலில் 2.0 ஆகவும், மதுரையில் 16.8 ஆகவும், நாகப்பட்டினத்தில் 17.0 ஆகவும், அதிகபட்சமாக நீலகிரியில் 30.7 மி.மீட்டரும், நெல்லையில் 69.7 ஆகவும் தமிழகம் மற்றும் புதுவையில் 9.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பொதுவாக கோடைக்கால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில் 9.4 மி.மீ அளவிலான மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 83 சதவீத மழை குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *