தமிழ்நாட்டில் இயல்பைவிட 83 விழுக்காடு மழை குறைவு!

1 Min Read

சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ, ஈரோட்டில் 4.5 ஆகவும், கன்னியாகுமரியில் 55.5 ஆகவும், காரைக்காலில் 2.0 ஆகவும், மதுரையில் 16.8 ஆகவும், நாகப்பட்டினத்தில் 17.0 ஆகவும், அதிகபட்சமாக நீலகிரியில் 30.7 மி.மீட்டரும், நெல்லையில் 69.7 ஆகவும் தமிழகம் மற்றும் புதுவையில் 9.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பொதுவாக கோடைக்கால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில் 9.4 மி.மீ அளவிலான மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 83 சதவீத மழை குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *