28.4.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பிரதமர் மோடியின் பொய்களின் தொழிற்சாலை எப்போதும் கை கொடுக்காது. நாட்டில் 65 சதவீத இளை ஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என மல்லிகார் ஜூனா கார்கே கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தாம் கைது செய்யப்பட்ட விதம், அமலாக்கத்துறையின் தன்னிச்சை யான போக்கை வெளிப்படுத்துவதாக, உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
தி டெலிகிராப்:
♦ எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது பாஜக. ஆனால் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறிப்பதாக பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்கிறார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.
♦ “சார் சவ் பார்” (400-க்கும் மேற்பட்ட) இடங்கள் என்ற வெற்றுக் கூச்சலுடன் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், ஆனால் ஏப்ரல் 19 அன்று முதல் சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு அந்த முழக்கத்தைக் கைவிட்டார். தற்போது நலத்திட்டங்கள் குறித்து பேச முற்படுகிறார் என்கிறார் கட்டுரையாளர் ஜே.பி.யாதவ்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ பிரதமர் மோடிக்கு நெருக்கமான சம்பல் கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா பிர மோத் கிருஷ்ணன் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக் கீட்டை நிறுத்தக் கோரிய காட்சிப்பதிவு வைரலாகி வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி ஒதுக்கித் தள்ளும் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா