பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 485 கன அடி தண்ணீர் திறப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.27– பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக 485 அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட் டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண் ட லேறு அணையில் இருந்து பெறப் படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண் ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி. ஜூலை முதல் அக்டோ பர் வரை 8 டி எம்.சி. ஆக 12 டி.எம்.சி. தண்ணீரை கண்ட லேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான தண் ணீர் இருப்பு இருந்ததால் கண்ட லேறு அணையில் இருந்து தண் ணீர் பெறவில்லை.

கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவ ரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.21 அடியாக பதிவாகியது. 1.020 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில் பூண்டி ஏரி யில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழி யாக கடந்த 2 மாதங்களாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டது. நேற்று (26.4.2024) காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. வினாடிக்கு 485 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
அதே போல் சென்னை குடிநீர் வாரியத்திற்குபேபிகால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *