ஆசிரியர் விடையளிக்கிறார்

Viduthalai
4 Min Read

கேள்வி 1 : பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் திருவள்ளுவர் பெயரில் பன்னாட்டு கலாச்சார மய்யங்கள் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. ஆளும் உ.பி. அரசு திருவள்ளுவர் சிலையை கோணிப் பையில் மூட்டைக்கட்டி ஓரங்கட்டி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்
பதில் 1 : தமிழ்நாட்டு மக்களை இப்படிப்பட்ட கண்கட்டி – கருத்துக்கட்டி – வித்தைகள் மூலம் ஏமாற்ற முடியாது.
திருவள்ளுவர் சிலைக்குக் காவி அடித்தவர்கள். திருக்குறளை ‘ஹிந்து நூல்’ என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் கூட்டம். அவரது கருத்துகளை சிதைக்கவே அந்த முயற்சி – புரிந்துகொள்வோம். அனைவரும்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 2 : நாடாளுமன்றத் தேர்தலில், படித்தவர்கள் நிறைந்த மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? படித்தவர்களே இப்படி ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் மெத்தனப் போக்கில் நடந்துகொள்வது சரியா?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்
பதில் 2 : “படிச் ‘சுவர்’கள்”, “வாசிச் ‘சுவர்’கள் மட்டுமே பலர் இருப்பதால், சாய்வு நாற்காலி அரசியல் காலட்சேபவாசிகள் உள்ள பெருநகரத்தில் இதுதான் நடக்கும்! என்னே கேவலம்!!

கேள்வி 3 : பா.ஜ.க. தலைவர்கள் அவர்களின் தேர்தல் அறிக்கையை மக்களிடையே கொண்டுபோவதை விட்டுவிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பரப்புகின்றனரே? (நடப்பு வாரத்தில் மட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிக அதிகமாக ‘டவுன்லோட்’ ஆகி உள்ளது).
– க.காளிதாஸ், காஞ்சி
பதில் 3 : நிலைகுலைந்து நாளும் பேசுவதன் பொருள் தோல்வி முகம் தென்பட்டுவிட்டது என்பதே! என்னே கேவலம்!!

கேள்வி 4 : முதலாம் கட்ட தேர்தலில் பா.ஜ.க.விற்கு மக்கள் ஆதரவில்லை என்ற அறிக்கையை அடுத்து மோடி கடுமையாக பேசினார், இரண்டாம் கட்டத்தேர்தலில் மக்கள் மோடியின் பேச்சை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அறிக்கை சென்றுள்ளதே – என்ன செய்யப்போகிறார் மோடி?
– மா.கன்னியப்பன், திருத்தணி
பதில் 4 : உலகின் மிகப் பிரமாண்ட விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ – பொய் தயாரிக்கும் புளுகுத் தொழிற்சாலையின் நிறுவனராகி அறிவியல், மின்னணுவியல் துணையோடு எப்படி உண்மையில்லாதவற்றை உலகைச் சுற்றிவரச் செய்வது என்பதை திட்டமிட்டுச் செயற்படுத்துவார் போலும்!

கேள்வி 5 : “தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையும், தொழில் துறையும் மேலைநாடுகளோடு போட்டியிடும் வகையில் வளர்ந்துள்ளது” என்று ஆங்கில வார இதழ் கூறியுள்ளது. போட்டி என்பது இந்த இரண்டில் மட்டும் தானா?
– மா.செங்குட்டுவன், நெல்லை
பதில் 5 : கல்வி, மருத்துவக் கட்டுமானம் ஏற்கெனவே சிறப்புடன் வளர்ந்து நிலைத்துவிட்டன. புதிதாக மேலும் விளையாட்டு, தொழில்துறையில் ஏற்பட்டிருக்கின்ற வளர்ச்சியைக் கூறும் செய்தி இது! வளர்ச்சியில் வேகம் கொண்டது ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

கேள்வி 6 : “மோடி ஒரு பொய்யர்” என்று கூறியதற்கு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளதே?
– ப.செல்வம், கோடம்பாக்கம்
பதில் 6 : ஆணையம் முன்பு அதை ராகுல் நிரூபித்துக் காட்ட பல ஆவணப் பதிவுகள் அணிவகுத்து நிற்க இப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்!

கேள்வி 7 : காங்கிரஸ் இன்றளவும் மென்மையான போக்கையே கையாள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுகிறதே?
– செ.காந்திநேசன், திண்டிவனம்
பதில் 7 : அதற்கென ஒரு நீண்ட அரசியல் பாரம்பரிய வரலாறு உண்டே! அதனால்தான்!!

கேள்வி 8 : வெளிநாடுகளில் கடன் வாங்கி அந்தக் கடனை கார்ப்பரேட் நண்பர்களுக்கு அள்ளிக்கொடுத்த பிரதமர் மோடியின் நட்பை பிசிராந்தையாரின் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாமா?
– வா.மாணிக்கவேல், வேலூர்
பதில் 8 : உங்களுக்கு பிசிராந்தையார் மீது ஏன் இப்படிக் கோபம்? அவர் என்ன “பாவம்” செய்தார்?

கேள்வி 9 : “பகவான் சிறீராமருக்கு இத்தனை ஆண்டுகள் கோயில் இல்லை. மகா புருஷ் மோடியால் அது நமக்கு கிடைத்திருக்கு. அதை நினைத்துப் பாருங்கள். இனி பகவான் ராமர் உங்களுக்கு வேலை கொடுப்பார்” என்று உத்தராகண்ட் மாண்டி தொகுதி வேட்பாளர் நடிகை கங்கனா ரணவத் தேர்தல் பரப்புரையின் போது கூறியுள்ளாரே?
– சா.செம்மொழி, நாமக்கல்
பதில் 9 : அயோத்தியில் 700 கோயில்கள் இருப்பதை புதிதாக பா.ஜ.க.வில் இணைந்த அந்த நடிகை அறியமாட்டார். அதனால்தான் இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்!

கேள்வி 10 : அண்ணாமலையோடு விமானத்தின் அவசர கதவைத் திறந்த நபரும், பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளருமான தேஜஸ்வி சூரியா தனது வெற்றிக்காக 7 மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்ததை தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பியதே – இது எவ்வகை பிரச்சாரம்?
– க.சாக்கியமுனி, செங்கை
பதில் 10 : பரவாயில்லையே, மோடியை வெல்லும் பெரிய வித்தைக்காரராக இருப்பார் போலிருக்கிறதே! பலே! பலே!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *