கனடாவில் பகுத்தறிவுப் புயல்

Viduthalai
3 Min Read

பேராசிரியர்
எம்.ஆர்.மனோகர்

ஞாயிறு மலர்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (Periyar Ambedkar Study Circle – Canada) என்ற பெயரில் ஒரு பகுத்தறிவாளர் மய்யம் இயங்கி வருவது பலருக்குத் தெரியாது. இவர்கள் நம் இயக்க வெளியீடான ஆங்கில மாத இதழ் Modern Rationalist போலவே, அதேவடிவில் Canadian Rationalist என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். நமது “திராவிடப் பொழில்” காலாண்டு இதழைப் போலவே தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. ‘விடுதலை’ வாசகர்கள் [email protected] என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனுப்பி வைக்கலாம். அவை வரவேற்கப்படுகின்றன.

கொள்கை அளவில் அவர்களும் நாமும் ஒரு மரத்துக் கிளைகள் என்றால் மிகையாகாது. சமூக நீதிக்கும், மனித நேயத்திற்கும், பகுத்தறிவிற்கும் நம்மைப் போலவே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் இவர்கள். ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பல கட்டுரைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் இந்தியாவில் நடைபெறும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையெல்லாம் வன்மையாகக் கண்டித்து தொடர்ந்து எழுதி வந்துள்ளது. ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாண வர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது இந்தக் குழுமம்.
‘கனடியன் ரேஷனலிஸ்ட்’ இதழ் பத்திரிகை உலகில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஒத்த சிந்தனையுள்ளவர்கள் என்ற முறையில் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும் நாம். உலகம் முழுவதும் அறியாமை இருள் நீங்க இப்படிப் பல அச்சு ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்துப் போராட முன்வர வேண்டுமல்லவா?
ஜாதி பாகுபாட்டுச் கொடுமைகள் இந்தியாவில் மட்டுமல்ல, கனடாவிலும் நிலவுகின்றன என்கிறார்கள் இவர்கள். இந்தியர்கள் பலர் அங்கு பல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். ஜாதி பாகுபாட்டால் அவர்கள் பல விதங்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டமும், ‘கனடியன் ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைக் குழுவும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடி வருகின்றன.

ஞாயிறு மலர்

நிறவெறிக்கு எதிராக அமெரிக் காவிலும், கனடாவிலும் நடந்த கடந்த கால போராட்டங்களைப் பற்றி விரிவாக ஏராளமான, அபூர்வமான ஒளிப் படங் களுடன் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார்கள் இவர்கள். புதிய தலைமுறையினர் வியப்புடன் அவற்றை யெல்லாம் படித்து வருகின்றனர். இளைய தலைமுறையினருக்கு நம் வரலாறு தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளி யிட்டுக் குவித்து வருகிறோம் அல்லவா? அதே பணியில் இவர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.

ஞாயிறு மலர்

வயோலா டேவிஸ் டெஸ் மாண்ட் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சார்ந்த கருப்பர் இனப் பெண். 1946இல் ஒரு கலை நிகழ்ச்சியின் போது வெள்ளையர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து விட்ட தற்காகவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1965ஆம் ஆண்டு, தன் 50ஆவது வயதில் இவர் காலமானார். இதுவல்ல செய்தி. 2010ஆம் ஆண்டு கனடா நாட்டு நோவா ஸ்காடியா (Nova Scotia) மாநில அரசு இந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவருடைய குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இதுவல்லவா செய்தி?
இப்படிப்பட்ட பல வரலாற்றுச் செய்திகளை ஒவ்வொரு இதழிலும் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது ‘கனடியன் ரேஷனலிஸ்ட்’.

ஞாயிறு மலர்

ஜனவரி – 2023 இதழின் அட்டைப் படத்தில் நம் ஆசிரியர் உற்சாகமாகத் தொண்டர்களை நோக்கி கையசைக்கும் ஒளிப்படம் இடம் பெற்றுள்ளது.
வேறொரு இதழில் தந்தை பெரியாரின் ஒளிப்படம். சில இதழ்களின் அட்டைப் படங்களில் அன்னை மணியமையார், கலைஞர் – இப்படி பல முதுபெரும் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவை யாவும் நமக்கு பெருமைக்குரிய விடயங்கள் தானே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *