26.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசியது குறித்த புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பா.ஜ, காங்கிரஸ் கட்சிகளுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கட்சிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
♦ மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் ஏழைகள் மீது அதிக வரி சுமத்தப்பட்டுள்ளது-காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ முதல் கட்ட தேர்தல் பிரதமர் மோடி, பாஜகவிற்கு பலம் என்பதாக இல்லாமல் பலவீனம் என்பதாக உள்ளது என்கிறார் பத்திரிகையாளர் சுனில் கடாடே.
♦பிரச்சினைகளை திசை திருப்புவது மோடிக்கு கைவந்த கலை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
♦ ஜனநாயகத்தை காப்பாற்றிடவே தற்போதைய தேர்தல் என ராகுல் வயநாடு மக்களிடம் வீடியோவில் பேச்சு.
♦ ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதுதான் பாஜகவின் லட்சியம் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
தி இந்து:
♦ “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், சுமார் 10 கோடி மக்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகள் மறுக்கப்படுகின்றன, இது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என மறு பெயரிடப்பட்டுள்ளது,” என்று ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
தி டெலிகிராப்:
♦ மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் பீகாரில் விநியோகம் செய்வதற்காக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா “பணப் பைகளைக்” கொண்டு வந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு.
♦ “அவர்கள் (மோடியும் பாஜகவும்) மற்றவர்கள் மாங்கல்யத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் புல்வாமாவில் நடந்தது என்ன? யாருடைய சுஹாக் (திருமண வாழ்க்கையின் அடையாளம்) பறிக்கப் பட்டது?” என தேஜஸ்வி கேள்வி.
– குடந்தை கருணா