அரசு பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தகவல்

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.26 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவ, மாண விகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உயர் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 மாதாந்திர ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர் களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு உள் ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வரு கிறது. இது தொடர் பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், பேரணிகளும் நடத் தப்படுகின்றன.
அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகள் நுழைவு வாயில் முன்பு விளம்பர அறிவிப்பும் வைக்கப்படுகின்றன.

கணிசமாக அதிகரிப்பு: வரும் கல்வி ஆண்டில் (2024-_2025) அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை பணியை மார்ச் 1-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறி வுறுத்தியிருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீவிர முயற்சிகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
அதேபோல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் 23,370 மாணவர்களும், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,749 பேரும் புதிதாக சேர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *