போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

1 Min Read

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்
சென்னை,ஏப்.26- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போக்கு வரத்து காவல்துறையினர் நேற்று (25.4.2024) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
ரயில்வே துறை சார்பில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பாலத்தில் 4-ஆவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று ( 26-ஆம் தேதி ) இரவு 10 மணி முதல் 3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அதன் விவரம்: ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் ( போர் நினைவிடம் நோக்கி ) அனுமதிக்கப் படாது.
அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை அணுகு சாலை – வடக்கு கோட்டை சாலை – முத்துசாமி சாலை – முத்துசாமி பாலம் – வாலாஜா பாயின்ட் – கொடிமரச் சாலை – போர் நினைவுச் சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம். காமராஜர் சாலையிலிருந்து பாரி முனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *