தஞ்சை, ஏப்.25-மருத்துவத்துறை யில் பல்வேறு சாதனைகளை செய்து வருபவரும், தமிழ் வழி மருத்துவக் கல்வியை தொடர்ந்து வலியுறுத்தி வருபவரும், பன்னாட்டு கருத்தரங்குகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வருமான தஞ்சையின் தலைசிறந்த மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் மறைமலை அடிகள் விருதினை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் வழங்கினார்.
23.4.2024 அன்று கழக காப் பாளர் மு. அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெய குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க. அன்பழகன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் மு.தனபால் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் மருத்துவர் சு.நரேந்திரனுக்கு பயனடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து!

Leave a Comment