தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுத்தறிவாளர்களுக்கு முன்னோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்து தனது மகன் மருத்துவர் ஜீவா விற்கும் பகுத்தறிவு முறை யில் மணவிழாவை நடத்தி திராவிட இயக்கத்தின் மீது தீராத தாகம் கொண்ட ஜீவா மெடிக்கல் உரிமை யாளர் இரா.அரங்கநாதன் (வயது 77) நேற்று (12.9.2023) உடல் நலக் குறை வால் மறைவுற்றார்.
அவரது உடலுக்கு திராவிடர் கழகக் காப்பா ளர் ஆர்.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் கழ கத் தலைவர் ஈ.சமரசம், ஒன்றிய கழகத் தலைவர் பி.சிவலிங்கம், நகர கழக செயலாளர் நெடுமிடல் பகுத்தறிவாளர் தீ. அமுல் செல்வம், விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் சி. தங்கராஜ், வேலு சாமி ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத் தினர்.
திராவிட முன்னேற் றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பி. பழனியப்பன் தலை மையில் கட்சியினர், மற் றும் மேனாள் அமைச்சர் வ. முல்லை வேந்தன் உட் பட அனைத்துக் கட்சி யினர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினார்.