ஸ்மோக் பிஸ்கட்… சென்னையில் உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தத் தடை

viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.25- அண்மையில் ஸ்மோக் பிஸ்கட்டை குடும்பத்தினருடன் சென்று ஆசை ஆசையாய் வாங்கி சிறுவன் மூச்சுவிட முடியாமல் துடிதுடித்த காட்சிப் பதிவை இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டிருந்தார். காட்சிப் பதிவில் கன்னடம் மொழி பேசப்பட்டதாகவும் இது கருநாடகாவில் நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
புதுச்சேரியில் ஏற்கெனவே பஞ்சுமிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தடைவிதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட் அடுத்த புயலாக உருவாகி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஸ்மோக் பிஸ்கட் சென்னை தீவுத் திடல் பொருட்காட்சி, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடக்கும் விழாக்களிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரவ நைட்ரஜன் பயன் படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திரவ நைட்ரஜன் கலந்த பொருட்களை எடுத்துக்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என் றும் எச்சரிக்கை விடுவித்துள்ளனர். மேலும் அத்தகைய திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் சென்னையில் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவு பாது காப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதனை மீறினால் பத்தாண்டு சிறை மற்றும் பத்து இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *