சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து, மாத்திரைகள் தரமற்றவை ஒன்றிய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

viduthalai
1 Min Read

சென்னை ஏப் 25 சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆய்வில் தெரியவந் துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய் யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன் படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற் றவை என்பது கண்டறியப்பட்டது. அதில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தரா கண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட் டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *