புதுச்சேரி, ஏப். 25- புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ருத்ரேஷ் (வயது27). கூலித் தொழிலாளி. கஞ்சா விற்பனையும் செய்து வந்தார். இவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளன. இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கஞ்சா விற்பதில் போட்டி இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (23.4.2024) காலை பெரியார் நகரில் உள்ள சிறீகெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ண மியை முன்னிட்டு பால்குட ஊர் வலம் நடந்தது. இதில் ருத்ரேஷின் தாய் சத்தியவதி மற்றும் தங்கை உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பால் குட ஊர்வலம் கோவில் முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலின் அருகே வந்தது.
கோவிலில் பகல் 11 மணியளவில் ருத்ரேஷ் நின்றுகொண்டு இருந் தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல்,ருத்ரேசை திடீரென சுற்றி வளைத்தது. தப்பிஓடமுயன்ற நிலையில் அவரை அந்த கும் பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ருத்ரேசின் தலை, கை, கால்கள் என உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்து ருத்ரேஷ் சரிந்து விழுந்தார். தன் கண் முன்பே வெட்டப்பட்ட மகனை தாய் சத்தியவதி தனது மடியில்தூக்கிப்போட்டு கதறி அழுதார். அண்ணனின் நிலையை பார்த்து தங்கையும் கதறினார். சிறிது நேரத் தில் ரத்த வெள்ளத்தில் நிகழ்வு இடத்திலேயே ருத்ரேஷ் பரிதாப மாக உயிரிழந்தார். இதற் கிடையே அந்த கும்பல் அங்கிருந்து மோட் டார் சைக்கிளில் தப்பிச் சென்றது.
இந்த கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா விற்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் புருத்ரேஷ், கவுதம் தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாக் கப்பட்டதால் ஆத்திரமடைந்த ருத்ரேஷ் பதிலுக்கு கவுதமை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இதுபற்றிய விவரம் தெரிய வந் ததும் கவுதம் ஆத்திரமடைந்தார். இதனால் அவர் முந்திக்கொண்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ருத்ரேசை கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.