பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர்களுக்கு……

1 Min Read

எதிர்வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும், செப்டம்பர் 17 அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடிடவும்,  கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி  தலைவர் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் மாணவர் மத்தியில் தெளிவாகக் கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகளை வெகு சிறப்பாக எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் சிறிய அளவில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தவும், முயற்சி செய்யலாம் – இதனை ஒரு செயல் திட்டமாக ஏற்று செயல்பட வேண்டுகிறோம்.

செயல்பாட்டினை மாநில துணைத்தலைவர்கள் வழக்கம் போல ஒருங்கிணைப்பு செய்து சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம்.

மேற்படி பிறந்தநாள் விழா தொடர்பாக பகுத் தறிவாளர்கள் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளை தலைமைக்கும் ‘விடுதலை’ ஏட்டுக்கும் அனுப்பிட அன்புடன் வேண்டுகிறோம்.

இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்,

 வி.மோகன், பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *