பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர்களுக்கு……

Viduthalai
1 Min Read

எதிர்வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையும், செப்டம்பர் 17 அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடிடவும்,  கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி  தலைவர் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் மாணவர் மத்தியில் தெளிவாகக் கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகளை வெகு சிறப்பாக எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் சிறிய அளவில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தவும், முயற்சி செய்யலாம் – இதனை ஒரு செயல் திட்டமாக ஏற்று செயல்பட வேண்டுகிறோம்.

செயல்பாட்டினை மாநில துணைத்தலைவர்கள் வழக்கம் போல ஒருங்கிணைப்பு செய்து சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம்.

மேற்படி பிறந்தநாள் விழா தொடர்பாக பகுத் தறிவாளர்கள் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளை தலைமைக்கும் ‘விடுதலை’ ஏட்டுக்கும் அனுப்பிட அன்புடன் வேண்டுகிறோம்.

இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்,

 வி.மோகன், பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *