சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி,செப்.14 – சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 5 பேர், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்  டிவிட்டர் வலை தளத்தில் 12.9.2023 அன்று  வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது:

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுடன் ஆலோ சனை மேற்கொண்டு, சென்னை மற்றும் கருநாடக உயர்நீதிமன்றங்க ளுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

அதன்படி, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் 5 பேரும் ஏற் கெனவே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ளனர்.

இதேபோல கருநாடக உயர்நீதி மன்ற நீதிபதியாக அனந்த் ராமநாத் ஹெக்டே, ஹேமலேகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே அந்த உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *