சென்னை, ஏப்.24 நுங்கம்பாக்கம் ஹாடர்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவு கழகத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் விடைகுறிப்பு (answer key) போலியாக தயார் செய்து விஜய் கண்ணுஜியா முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சூளைமேட்டில் தங்கி இருந்த விஜய் கண்ணுஜியாவை உ.பி. காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். இதன் பின் அவரை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் போலியான விடைகுறிப்பு தயாரித்து விற்பனை செய்த இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் காவலர் தேர்வில் முறைகேடு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books