அய்தராபாத், ஏப். 24- கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடை பெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரி ழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் உள்ள பிரத்தியேக பிரேக்கிங் சிஸ்டம் செயல்படவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.
ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு, ரயிலின் ஓட்டுநர் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண் டிருந்தது தான் காரணம் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்த நிலையில், தற்போது ரயில் பெட்டியில் உள்ள பிரேக்கிடங் சிஸ் டம் செயல்படாததுதான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே மோடி ஆட்சியில், சாமானிய மக்களின் வரவேற்பை பெற்ற ரயில்வேதுறை சீரழிந்து வருவதா கவும், முறையான பராமரிப்புகள், மற்றும் வசதிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கள் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் இறுதியில் ஆந்திர மாநிலம் விஜயநகர் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்துக்கு காரணம், ஒன்றிய பாஜக அரசின் மெத்தனம் என்பது தெரிய வந்துள்ளது.
ரயில் பெட்டிகளில் போதுமான பாதுகாப்பு செய்யப்படவில்லை என் றும், ரயில் பெட்டிகளில் இருக்க வேண் டிய பிரத்தியேக பிரேக்கிங் சிஸ்டம் செயல்படவில்லை என்பதும், இது தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுநர் குழு குற்றம் சாட்டி உள்ளது. ஆந்திரா வில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆ-ம் தேதி விஜயநகர் மாவட் டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ராயகடா பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது.
ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்ததால் அந்த ரயில் அங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் ரயில்வே ஊழியர்கள் பிரச் சினையை சீராக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பலசா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக பயணிகள் ரயில் மீது மோதி யது. இந்த பயங்கர விபத்தில், 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு பல பயணி கள் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். இதில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தீயணைப்புப் படை, பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின் சிக்கிய வர்களை மீட்டனர்.
இதையடுத்து, ரயில் விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் இருவரும் கவனக்குறைவாக இருந்ததால்தான் ரயில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அதாவது, ரயில்வே விதிகளின் படி பழுதடைந்த தானியங்கி சிக்னல் களில் ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின் 10 கி.மீ வேகத்தில்தான் புறப்பட வேண்டும். ஆனால் இதை ராயகடா ரயில் பின்பற்றதாததால்தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.