அசாம் முதலமைச்சரின் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 Min Read

கவுகாத்தி, செப் 14 அசாம் மாநில பாரதீய ஜனதா முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா. இவரது நிறு வனம் ஒன்று ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று இருப்பதாக அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாக காங் கிரஸ் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகாய் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘விவ சாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பிரதமர் மோடி கிசான் சம் படா திட்டத்தைத் தொடங்கி னார். ஆனால் அசாமில் முத லமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது மனைவி யின் நிறுவனம் ரூ.10 கோடி மானியத்துடன் கூடிய கடன் பெற உதவியுள்ளார். பாரதீய ஜனதாவினரின் வளர்ச்சிக் காகத்தான் ஒன்றிய அரசு திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளதா?’ என கேள்வி எழுப்பி இருந்தார். 

இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டியிருந்தனர். இது மாநில அரசியலில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள் ளது. ஆனால், இந்த குற்றச் சாட்டை ஹிமந்தா பிஸ்வா சர்மா மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘எனது மனை வியோ அல்லது அவர் தொடர்புடைய நிறுவனமோ ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதி மானியமும் பெற்ற தில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகி றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *