முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி” இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் நூற்றாண்டு போற்றுகிறோம் – நினைவு கூர்கிறோம்

1 Min Read

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவரும், கழகக் காப்பாளருமான மானமிகு இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் இந்நாள்! (23.4.2024)
ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொள்கை என்று வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய – இயக்கத்தினருக்கு வழி காட்டிய ஒப்பற்ற கொள்கையாளர்!
அவரது நூற்றாண்டு விழாவை கழகம் நடத்த இருந்த நிலையில் உடல் நலக் குறைவால் மறைவுற்றார்.
மறைந்தாலும் அவரின் தொண்டும், கருஞ்சட்டைக்காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறி முறையும் நம் நெஞ்சங்களில் என்றும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.
அவர் பிறந்த நாளில் அவரின் நினைவை நெஞ்சில் நிறுத்துவோம்!
வாழ்க இராஜகிரி கோ. தங்கராசு.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
23.4.2024

குறிப்பு: தஞ்சையில் உள்ள பெரியார் இல்லத்திலும், சென்னை பெரியார் திடலிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *