துறைகளுக்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி வெளியீடு!

1 Min Read

சென்னை,ஏப்.23- பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று (22.4.2024) வெளியிட்டது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப் புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023 நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இத்தேர்வை 111 பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், அடுத்த கட்டமான நேர்காண லுக்கு 33 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதேபோல, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (கிரேடு-1) பணியில் 9 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 6, 7ஆ-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், நேர்காணலுக்கு 25 பேர் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

கருவூலங்கள், கணக்கு பணிக ளில் 52 காலி இடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி 5, 6ஆ-ம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இதில், கணினி வழி சான்றிதழ் சரிபார்ப் புக்கு 120 பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். மேற்கண்ட 3 தேர்வுக ளில் நேர்காணல், சான்றிதழ் சரி பார்ப்புக்கு தற்காலிகமாக அனு மதிக்கப்பட்ட தேர்வர்களின் பதி வெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன் பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் அஜய் யாதவ் தெரிவித் துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *