சென்னை,ஏப்.23- பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று (22.4.2024) வெளியிட்டது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப் புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023 நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இத்தேர்வை 111 பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், அடுத்த கட்டமான நேர்காண லுக்கு 33 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதேபோல, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (கிரேடு-1) பணியில் 9 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 6, 7ஆ-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், நேர்காணலுக்கு 25 பேர் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
கருவூலங்கள், கணக்கு பணிக ளில் 52 காலி இடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி 5, 6ஆ-ம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இதில், கணினி வழி சான்றிதழ் சரிபார்ப் புக்கு 120 பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். மேற்கண்ட 3 தேர்வுக ளில் நேர்காணல், சான்றிதழ் சரி பார்ப்புக்கு தற்காலிகமாக அனு மதிக்கப்பட்ட தேர்வர்களின் பதி வெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன் பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் அஜய் யாதவ் தெரிவித் துள்ளார்.