கொல்கத்தா, ஏப்.23- மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரி ணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 20.4.2024 அன்று பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட் சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பேசியதாவது:
ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில நாள் களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.
இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப் பிடக் கூடாது என நாங்கள் கூற முடி யுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.
இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தரப் பிர தேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடை கள் மூடப்படுவதாக கேள்விப்பட் டேன்.
நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு செய்ய முடியும்? இவ்வாறு அவர் கேள்வி எழுப் பினார்.