அருப்புக்கோட்டை அருகே17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!

viduthalai
1 Min Read

அருப்புக்கோட்டை, ஏப்.23- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பாண் டியநாடு பண்பாட்டு மய்யத்தை சேர்ந்த சிறீதர் மற்றும் முனைவர் தாமரைக் கண்ணன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரே இடத்தில் அய்ந்து நடுகற்கள் இருப்பது கண்டறியப்பட் டது. இந்த நடுகற்கள் குறித்து அவர்கள் கூறியதாவது:

பொதுவாக வீர மரணம் அடைந்த வர்களுக்கு அவர்களின் பெயர், பெரு மையை நினைவு கூறும்விதமாக நடுகல் வைத்து வழிபடுவது சங்க காலத்திற்கு முன்பிருந்தே வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்த நடுகற்களானது, ஒரே இடத்தில் நடப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு நடுகல்லில் நின்ற கோலத்தின் வீரன் வாளினை மேல் நோக்கி பிடித்தபடி தலைக்கு மேலே நாசிக்கூடுடன் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் வீரன் வாளேந்தியபடியும், அருகில் வணங்கியபடி அவரது மனைவி, காலடியில் அவரது மகன் ஆகியோர் உள்ளனர். தலைக்கு மேலே சிதைந்த நிலையில் மூன்று வரிகொண்ட தமிழ் கல்வெட்டும் உள்ளது.

மற்றொரு நடுகல்லில் ஒரு பெண் இரு கரம் கூப்பி வணங்கியபடி நின்ற கோலத் தில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட் டுள்ளது. இதனை பார்க்கும்போது கணவன் இறந்த பின்பு, நோன்பு இருந்து அவர் உயிர் துறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அடுத்ததாக இருகரம் கூப்பியபடி நின்ற கோலத்தில் ஒரு வீரனின் உருவம் இருக்கிறது.
இங்கு வித்தியாசமாக பாம்பு உருவம் கொண்ட நடுகல்லும் காணப் படுவது சிறப்பான ஒன்றாக இருக்கிறது. இச்சிற்பங்கள் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவ்வாறு கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *