குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் சற்றும் குறையவில்லை! நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைக்கும் பிரதமர்! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 23- மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு மிக்க பதவியின் கண் ணியத்தையும் சிறப்பையும் சீர்கு லைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார்.
“அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சி யில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொ ன்னார்கள். இதன் பொருள் அவர் கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக் கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ் டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுரு வியவர்களுக்குத் தரப் போகிறீர் களா… மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப் புற நக்சல் சிந்தனை என் தாய் மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல் யத்தைக் கூடவிட்டு வைக்காது.”
என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைத்துள்ளது.

இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடு களில் ஈடுபட்டதில்லை.
தனது பத்தாண்டுக் கால ஆட்சி யின் மக்களைக் கவரத்தக்கச் சாத னைகளைப் பேச மோடிக்கு ஏது மில்லை. நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாள ராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிற கும் சற்றும் குறையவில்லை என் பதை அவரது பரப்புரை வெளிப் படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறை களின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்து தடை செய் யப்பட்டுள்ளது. ஒரு பிரதம ராக இவர் தேர்தல் நடத்தை விதி முறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத் தையும் மதிக்க வில்லை.

ஒருபோதும் சிறு பான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம் பரம் செய்துவிட்டு அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட் சியின் அருவருப்பான சந்தர்ப்பவா தத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது.
பிரதமர் பதவிக்கான கண்ணி யத்தைச் சீர்குலைத் துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட் சியின் சார்பில் கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூ பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இதை இந்தியத் தேர்தல் ஆணையம் மவுனமாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலகஅரங்கில் கேள்விக்குறியாகி விடும் என்பதையும் கருத்திற் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *