கட்டணமில்லா பேருந்து பயணம் பெண்களின் மேம்பாட்டிற்கு பேருதவியாக அமைந்துள்ளது! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு!

viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 23- தமிழ்­நாடு அர­சின் ‘விடி­யல் பய­ணத் திட்­டம்’ பெண்­க­ளின் சமூக பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்கு பேரு­த­வி­யாக அமைந்­துள்­ள­தாக ‘தி இந்து’ ஆங்­கில நாளேடு பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

Where does this bus go? என்ற தலைப்­பில் ‘தி இந்து’ நாளேடு சிறப்­புக் கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. ஆட்சி ஏற்­பட்­ட­தும் நடைமுறைப்­ப­டுத்­தப்­பட்ட விடி­யல் பய­ணத் திட்­டம், பெண்­க­ளின் சேமிப்பை அதி­க­ரித்­துள்­ள­து­டன், அவர்­கள் சுதந்­திர உணர்­வு­டன் பய­ணங்­களைமேற்­கொள்­வ­தற்­காக வாய்ப்பைஏற்­ப­டுத்தி உள்ள­தா­க­வும் அக்­கட்­டு­ரை­யில் குறிப்­பி­டப்பட்­டுள்­ளது.

இத்­திட்­டம் குறித்து பல்­வேறு அமைப்­பு­கள் ஆய்­வு­களை மேற்­கொண்­ட­தா­க­வும், இந்த ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பஞ்­சாப் மாநில அர­சும் இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­வ­தை­ யும், கரு­நா­டகா மற்­றும் தெலங்­கானா மாநில அர­சு­க­ளும் இது போன்ற சலு­கை­களை அறி­வித்­துள்­ளதையும் இக்­கட்­டு­ரை­யில் சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது.
இத்­திட்­டம் பெண்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெற்­றுள்­ள­து­டன், மாந­க­ரப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் உட்­பட ஏழு அர­சுப் போக்­கு­ வ­ரத்­துக் கழ­கங்­களை திவால் நிலை­யில் இருந்து காப்­பாற்றி உள்ளதா­க­வும்,

இத்­திட்­டத்­திற்­காக மாநில அரசு அளிக்­கும் மானி­யம், கரோனா காலத்­தில் ஏற்­பட்ட இழப்பு கார­ண­மாக சிர­மத்­தில் இருந்த போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­க­ளின் நிதி ­நி­லை­மையை சீராக்கி உள்­ள­தா­க­வும் கட்­டுரை பாராட்டி உள்­ளது.

இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது முதல் இது­வரை ஏழு போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­கள் மூலம் 440 கோடி விடி­யல் பய­ணங்­கள் மேற்கொள்ளப்­பட்­டுள்­ள­தா­க­வும், நடப்பு நிதி­யாண்­டில் தின­சரி 51 லட்­சம் பெண்­கள் கட்­ட­ண­மில்லா பேருந்து பய­ணங்­கள் மூலம் பய­ன­டைந்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­கள் இத்­திட்­டத்­தில் இணைக்­கப்­பட்­டுள்­ளது தமிழ்­நாடுஅர­சின் சமூக பொறுப்பை வெளிப்­ப­டுத்­து­கி­றது என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இத்­திட்­டத்­தின் பய­னா­ளி­க­ளி­டம் நடத்­தப்­பட்ட ஆய்­வு­கள் மூலம், விடி­யல் பய­ணத் திட்­டத்­தால், சரா­ச­ரி­யாக ஒரு பெண் மாதம் 800 ரூபாய் சேமிப்­ப­து­டன், அவர்­க­ளின் சுதந்­திர உணர்வு அதி­க­ரித்­துள்­ளது எனக் குறிப்­பிட்­டுள்ள ‘தி இந்து’ கட்­டுரை, இல்­லத்­த­ர­சி­கள், முறை­சாரா தொழி­லா­ளர்­கள், சுய­தொ­ழில் செய்­ப­வர்­கள், மாண­வி­கள், தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் ஊழி­யர்­கள் மற்றும் ஓய்வு பெற்­ற­வர்­கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் விடி­யல் பய­ணத்­தால் பயன்­பெற்று வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

மேலும், புதிய பேருந்­து­களை வாங்க போக்­கு­வ­ரத்­துக் கழ­கங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­ தா­க­வும், புதிய பேருந்­து­கள் வந்­த­வு­டன் விடி­யல் பய­ணத்­திட்­டப் பேருந்­து­க­ளின் எண்­ணிக்கை உயர்த்­தப்­ப­டும் என அதி­ கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் ‘தி இந்து’ கட்­டு­ரை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *