சென்னை, ஏப். 23- பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (23.4.2024) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் கோடைகால விடு முறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன. இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்க ளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்ற றிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடு முறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட் களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் கள் பெறப்பட்டு இருக்கிறது.
இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளி களும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிக ளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத் தம் தரக்கூடாது. இந்த உத்தரவை கண்டிப் பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.