75% மதிப்பெண் பெற்றால்தான் பி.எச்.டி. படிப்பில் சேரலாமாம் யுஜிசி அறிவிப்பு
புதுடில்லி,ஏப்.22- கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முது கலை பட்டம் அவசியம்.
‘நெட்’ தேர்வு எழுதுவ தற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றி ருக்க வேண்டும். இந்நிலை யில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல் கலைக்கழக மானிய குழு தளர்த்தி உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:-
4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். ‘நெட்’ தேர்வு எழு தலாம். ஆனால், 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப்பெண் கள் எடுத்திருக்க வேண்டும். ‘கிரேடு’ முறையாக இருந் தால், 75 சதவீத மதிப்பெண் களுக்கு சமமான ‘கிரேடு’ பெற்றிருக்க வேண்டும்.
4 ஆண்டு பட்டப்படிப் பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப் பமான பாடத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற் படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர் அல்லாதவர்கள்), மாற்றுத்திறனாளிகள், பொரு ளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. – இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக் காப்பீடு…
மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கு தற்போ துள்ள உச்ச வயது வரம்பு 65அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம் பாட்டு ஆணையம் (அய்ஆர் டிஏஅய்) ரத்து செய்துள்ளது.
வாய்ப்பு
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங் களில் ஒரு சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமை களில் (ஏப். 22, 23) மழை பெய்ய வாய்ப் புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.