திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தமுன்னோடியும், மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான மதுரை பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 84ஆவது பிறந்த நாளில் (20.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் நலமுடன் வாழ்ந்து தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டார். மதுரையில் அவர் இல்லத்தில் தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ், பகுதித் தலைவர் மாவட்ட துணைத்தலைவர் இரா.திருப்பதி, ஆட்டோசெல்வம் ஆகியோர் ஆடைகளும் புத்தகங்களும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
பொன்.முத்துராமலிங்கம் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books