தமிழ்நாட்டில் 2.72 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது

3 Min Read

சென்னை,ஏப்.22- கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்புநோக்கும்போது இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 2.72 சதவீதம் வாக்குகள் குறை வாக பதிவாகியுள்ளன.
தொகுதிவாரியாக 4 தொகுதி களில் அதிகமாகவும், மீதமுள்ள 35 தொகுதிகளில் கடந்த தேர் தலைவிட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளும் பதி வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.

இதில் தமிழ்நாட்டில் பதி வான வாக்குகள் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்து நேற்று (21.4.2024) பகலில் இறுதி வாக்குப் பதிவு நிலவரத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் இறுதியாக 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக்களவை தேர்தலை காட் டிலும் (72.44) 2.72 சதவீதம் குறைவாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும், தருமபுரி தொகுதியே அதிகபட்ச மாக 81.20 சதவீத வாக்குப் பதிவுடன் முதலிடத்தில் உள் ளது.
2ஆ-ம் இடத்தில் கள்ளக் குறிச்சி (79.21), 3ஆ-ம் இடத்தில் நாமக்கல் (78.21), 4ஆ-ம் இடத் தில் சேலம் (78.16), 5ஆ-ம் இடத் தில் பெரம்பலூர் (77.43) ஆகிய தொகுதிகள் உள்ளன. கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தலில்,

2ஆ-ம் இடத்தில் நாமக்கல் (80.22), 3ஆ-ம் இடத்தில் கரூர் (79.55), 4ஆ-ம் இடத்தில் பெரம் பலூர் (79.26), 5ஆ-ம் இடத்தில் ஆரணி (79.01) ஆகிய தொகுதிகள் இருந்தன.
இதில், 2019இ-ல் 2ஆ-ம் இடத்தில் இருந்த நாமக்கல், இம்முறை 3ஆ-ம் இடம் பிடித் துள்ளது குறைவான வாக்குப் பதிவை பொறுத்தவரை, இம் முறை மத்திய சென்னை 53.96 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது.

அதற்கு முந்தைய இடங்களை தென் சென்னை (54.17), வட சென்னை (60.11) சிறீபெரும்புதூர் (60.25), மதுரை (62.04) ஆகிய தொகுதிகள் பிடித்துள்ளன.
கடந்த 2019 தேர்தலில் கடைசி இடத்தை தென் சென்னை (57.07) தொகுதியும், அடுத்த இடங்களை மத்திய சென்னை (58.98), சிறீபெரும் புதூர் (62.44), கோவை (63.86), வடசென்னை (64.26) பங்கிட்டுக் கொண்டன.

இரு தேர்தல்களின்போதும் சென்னையில் உள்ள 3 தொகுதி கள், சிறீபெரும்புதூரில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது குறிப் பிடத்தக்கது. உயர்வும், குறைவும்: கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தலுடன் தொகுதி வாரியாக ஒப் பிடும்போது, இந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வாக் குப்பதிவு சதவீதம் உயர்ந் துள்ளது.
இந்த தேர்தலில் வேலூரில் 2.07 சதவீதம், கோவையில் 1.03 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 0.40 சதவீதம், சேலத்தில் 0.45 சதவீத மும் வாக்குகள் அதிகமாக பதி வாகியுள்ளன. மற்ற 35 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் குறைந்தே உள்ளது.

அதிகபட்சமாக தேனியில் 5.43, சிவகங்கையில் 5.26, மத்திய சென்னையில் 5.02, நாகப்பட் டினத்தில் 4.99, அரக்கோணம், கன்னியாகுமரியில் 4.46 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன.
மேலும், 5 சதவீதத்துக்கு மேல் 3 தொகுதிகளிலும், 4-5 சதவீதம் வரை மேல் 8 தொகுதி களிலும், 3-4 சதவீதம் வரை 9 தொகுதிகளிலும், 2-3 சதவீதம் வரை 8 தொகுதிகளிலும்,1- 2 சத வீதம் வரை 4 தொகுதிகளிலும் 1 சதவீதத்துக்குள் 3 தொகுதிகளி லும் வாக்குப்பதிவு குறைந்துள் ளது.
மேலும், கடந்த தேர்தல் மற் றும் இந்த தேர்தலில் அதிக வித்தியாசமின்றி ஒரு சதவீதத்துக் கும் குறைவாக மாற்றம் உள்ள தொகுதிகளை பொறுத்தவரை, கள்ளக்குறிச்சி (0.40), சேலம் (0.25) தொகுதிகளில் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது.

அதேபோல், கரூர் (0.85), பொள்ளாச்சி (0.74), ராமநாத புரம் (0.21) தொகுதிகளில் குறைவாக பதிவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *