22.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ. சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றை வாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
♦ ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் இணையர்கள் பங்கேற்பு.
♦ தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் முழுமையாக நடைபெற்றது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ ரயில்வே துறையை காப்பாற்ற, மோடி அரசை அப்புறப்படுத்த வேண்டும் – ராகுல் சமூக வலைத்தளத்தில் பதிவு.
♦ சி.பி.அய்., அமலாக்கத்துறை, வருமானத் துறை ஆகிய அரசுத் துறைகளை மோடி அரசு தவறாக கையாள் கிறது என மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் குற்றச் சாட்டு.
♦ இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாறுதலுக்குள்ளாக்குவோம், ப.சிதம் பரம் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பாஜகவிற்கு எதிராக குஜராத் முழுவதும் சத்திரிய சமூகம் போராட்டம் நடத்த முடிவு.
♦ மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்களிப்பில் “ஏமாற்றத்தை” சந்தித்த பின்னர், பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து, பொய்யான கருத்துகளை கூறி வருவதாக காங்கிரஸ் பதிலடி
– குடந்தை கருணா