புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று- 22.04.1870

2 Min Read

உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ரஷ்யாவில் ஏற்படுத்தி, இந்தியா உள்பட பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று.

பள்ளிப்புத்தகங்கள் லெனின் வரலாற்றை கட்டாயம் தாங்கி வர வேண்டிய காலகட்டத்தில் இந்த உலகம் உள்ளது.

1. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பேராயுதங்கள் என்பது புரட்சியாளர் லெனினின் புகழ் பெற்ற வாசகம். புத்தகங்களை ஆயுதங்களாக ஏந்தியவர் அவர்.
2. கற்றுக் கொள்ளல், ஒழுங்கமைத்தல், ஒன்று படல், போராடுதல் இவற்றின் மூலம் இளைஞர் சக்தி தம்மையும் தயாரித்துக் கொண்டு, உலகையும் ஒழுங்கமைக்க வேண் டும் என்று இளைஞர்களை செதுக்கியவர் அவர்.
3. 1870 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 இல் பிறந்து, விளாடிமிர் இலியிச் உல்யானவ் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டு, ரஷ்யாவில் ஓடிய லீனா நதியின் பெயரால் லெனின் என அழைக்கப்படலாயினார்.
4.1905ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, ரஷ்யாவில் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி நடந்த தொழிலாளர் கூட்டத்தில், ஓர் ஞாயிறன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொழி லாளர்கள் உயிரிழந்தனர்.
சிவப்பு ஞாயிறு என்று அழைக்கப்பட்ட இந்தப் படுகொலையே 1917ஆம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்த மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு காரணமாயிற்று.
5. சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம் இவற்றில் அடிப்படை மாற்றங்களை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், புதுமையான வாழ்வியல் முறைகளோடு, அவற்றிற்கான செயல்களை நடைமுறைப்படுத்துவதே புரட்சி என்றார்.
6. நிலத்தின் மீது உரிமை கொண்டாடும் தனி உடைமை உரிமையை அகற்றினார்.
7. பெரிய பண்ணைகள், தேவாலய நிலங்கள், அரச குடும்ப நிலங்கள் இனி அரசின் சொத்தென அறிவித்தார்.
8. உலகின் மாபெரும் தத்துவமேதை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை முதலில் நடைமுறைப்படுத்திய ஆட்சி லெனி னுடையது.
9. சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, பாட்டாளி மக்களின் பொதுவுடைமை அரசை நிறுவி, மாபெரும் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் இன்றுவரை உலகை நிர்மாணிக்கும் சக்தியாக பார்த்துக் கொண்டார், அதனைத் தொடரச் செய்தார்.
10. உலகின் 60 சதவீத வளங்களை, 10% முதலாளித்துவ வர்க்கம் ஏகபோகமாய் ஆளுமை புரியும் இந்த வேளையில், புரட்சி யாளர் லெனின் இன்னும் அதிகமாகவே உலகிற்குத் தேவைப்படுகிறார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *