இப்படியும் ஒரு வேட்பாளர் மக்களை நம்பாமல் ‘விஜய முகூர்த்தத்தை’ நம்புகிறாராம்!

1 Min Read

காந்திநகர்,ஏப்.21- குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வேட்புமனு தாக்கல் முடிவு செய்தி ருந்த ‘விஜய முகூர்த்தத்தை’ தவற விட்டதால், மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வதாகக் கூறி திரும்பச் சென்றார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தற் போதைய எம்.பி.யுமான சி.ஆர்.பாட்டீல் வியாழக்கிழமை பகல் 12.39 மணிக்கு ‘விஜய முகூர்த்த’ நேரத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தி ருந்தாராம்.

அதன்படி, அவர் வேட்புமனு தாக் கல் செய்வதற்காக ஆதரவாளர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் புடை சூழ பாஜக அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக அவரது வாகனப் பேரணி மெதுவாகவே சென்ற தாம்.

அவர் ஆட்சியர் அலுவலகத்தை எட்டியபோது நேரம் பகல் 12.39 மணியைக் கடந்திருந்தது. ‘விஜய முகூர்த்தம்’ கடந்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று சி.ஆர் பாட்டீல் முடிவெடுத்தார். இதையடுத்து, அவர் மனு தாக்கல் செய்யாமலேயே வீடு திரும்பிவிட்டாராம். அடுத்த நாளில் மனுததாக்கல் செய்வார் என்ற கூறப்பட்டதாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *