21.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ வட நாட்டில் குறிப்பாக உ..பி.யில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது, அகிலேஷ் பேட்டி.
♦ ஜனநாயகத்தைக் காப்பாற்ற, கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது, பிரியங்கா கருத்து.
♦ மோடியின் தேர்தல் பிரச்சார வசதிக்காகவே ஏழு கட்ட தேர்தல், மம்தா குற்றச்சாட்டு.
♦ பாஜகவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மன நிலை உள்ளது, சித்தராமைய்யா.
♦ பாஜகவின் பிரதமர் போல மோடி பேசுகிறார். நாட்டில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை குறித்து பேசுவதில்லை, சரத் பவார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ரத்து: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில், ‘‘எலான் மஸ்க் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எங்களின் பிரதமர், மஸ்கை வரவேற்பார்’’ என கூறி உள்ளார்.
♦ ‘நமது சொந்த அறிவியலைச் செய்யாமல், சொந்தமாகத் தொழில் நுட்பத்தை உருவாக்காமல் உயர் வளர்ச்சி சாத்தியமில்லை’: முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 4 லட்சம் கோடி பொதுப் பணத்தை கொள்ளையடித்த பிறகு, அவர்கள் “கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்” என்று சீதாராமன் கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் பதிலடி..
தி இந்து:
♦ தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வாக்குகளை குறிவைத்து சமாஜ்வாதி கட்சி தேர்தல் வியூகம்.
தி டெலிகிராப்:
♦ விவசாயிகளான எங்களை மோடி ஏமாற்றி விட்டார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வதாக அவர் உறுதியளித்தார், ஆனால் 2014-அய் ஒப்பிடும்போது நாங்கள் ஏழைகளாகி விட்டோம். கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது மற்றும் பயிர் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. எனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக நான் ஊரக வேலைவாய்ப்பின் கீழ் வேலை தேட வேண்டும்’ என நாக்பூர் விவசாயி கோபம்.
♦ பாஜகவில் அதிகாரப் போட்டி: மோடிக்கு அடுத்தபடியாக ஆதித்யநாத்தின் புகழ் இரண்டாவதாக உள்ளது என்றும், மோடியின் ‘இயற்கையான வாரிசாக’ தன்னைக் கருதும் தற்போதைய ஆட்சியில் நம்பர் 2 ஆக இருக்கும் ஷாவுக்கு இது சவாலாக இருப்பதாகவும் பாஜகவில் பலர் நம்புகிறார்கள்.
– குடந்தை கருணா