சென்னை, ஏப். 21- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை திரும்பப் பெறப்படும். மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்க அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அவை, வாகனச் சோதனை மற்றும் புகார்கள் அடிப்படையில் வீடுகள், அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், தமிழ்நாட் டில் ரூ.174.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,083.77 கோடி மதிப் பிலான தங்கம் உட்பட ரூ.1,301 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு 19.4.2024 அன்று நடை பெற்றது, வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனையை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண் காணிப்பு குழுக்கள் கலைக்கப் படுகின்றன. இதுதொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் ஆணை யம் வழங்கியுள்ளது. இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகள் தமிழ் நாட்டில் அமலிலேயே உள்ளன.
மாநில எல்லையில் தொடரும்:
அதேநேரம், கேரளா, கரு நாடகா மற்றும் ஆந்திர மாநிலங் களில் தேர்தல் நடைபெறும் வரை அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு எல்லை மாவட்டங் களில் மட்டும் தேவைப்படும் இடங்களில் பறக்கும் படை மற்றும் நிலைக் குழுக்கள் தங்கள் பணி களைத் தொடரும். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் ரொக் கத்துக்கான உச்சவரம்பு ரூ.50 ஆயி ரம் என்பதில் மாற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் விக்கிரமராஜா, இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, தேர் தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.