இந்தியா கூட்டணியை சிறப்பாக ஒருங்கிணைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சருக்கு உண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 21- தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கி ணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்தியாவின் எதிர்கா லத்தை நிர்ணயிக்கும் மக்களவைத் தேர்தலின் முதல்கட்டம் தமிழ் நாட்டில்அமைதியாக 70 சதவீத வாக்குப்பதிவுடன் நடந்து முடிந் திருக்கிறது. ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெற்றதேர்தலில் தமிழ்நாடு மக்கள் பெருவாரியாக ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்கும் வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. தமிழ்நாட்டின் உரிமைக ளையும், நலன்களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்துவந்த பாஜக ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட் டும் வகையில் முதலமைச்சர் மேற் கொண்ட கடுமையான பரப்புரையால் ‘நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே’ என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
40 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாகக் கருதி, வெற்றி வாய்ப்புக்கான அனைத்து முயற்சிகளையும் கூட்டணி கட்சித் தலைவர்களோடு பகிர்ந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சிக்கும், பாராட் டுக்கும் உரியது.

அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பரப்புரை யில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இருவரும் ஆற்றிய உரைகள் தமிழ்நாடு மக்களிடையே பெரும் மாற்றத்தையும், எழுச்சி யையும் ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கேவின் தமிழ்நாட்டு பரப்புரையும் மிகுந்த பயனுள்ள இருந்தது.

அந்தவகையில், கூட்டணி கட் சிகளிடையே நல்லிணக்கத்தையும், ஆரோக்கியமான செயல்பாடுக ளையும் உருவாக்கி, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ‘இந்தியா’ கூட்டணியின் தமிழ்நாட்டுத் தலைவர் மு.க.ஸ்டா லினுக்கும், கூட்டணி கட்சித் தலை வர்களுக்கும், வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட தொண்டர் களுக்கும் நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *