தரமற்ற கோயில் பிரசாதம்

viduthalai
1 Min Read

தரமற்ற கோயில் பிரசாதம் விற்பனையை
தடை செய்ய இந்து அறநிலையத்துறை
அதிகாரிகளுக்கு உரிமை உண்டு
உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 21- திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜசாமி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வழங்கப் பட்டது.

தரம் குறைந்த, கெட் டுப்போன பிரசாதங் களை இந்த கோயிலில் விற்பனை செய்வதாக பக் தர்கள்புகார் அளித்தனர். அதையடுத்து இந்த பிரசாத விற்பனை நிலை யத்தை ஆய்வு செய்த அற நிலையத்துறை அதிகாரி கள் பிரசாதங்களின் மாதிரிகளை ஆய்வகத் துக்கு அனுப்பி வைத்த தில், அவை தரம்குறைந் தவை என்றும், கெட்டுப் போனவை என்பதும் உறுதியானது.
ஒப்பந்தம் ரத்து:

அதையடுத்து ஒப்பந்ததாரரான சீனிவாசனுக்கு தாக்கீது பிறப்பிக்கப்பட்டது. அவர் இனிமேல் இது போல நடக்காது என விளக்கமளித்தார். ஆனால் அதையேற்க மறுத்த அறநிலையத் துறை அதிகாரிகள் சீனி வாசனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து சீனிவாசன் தாக்கல் செய்திருந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி யம் முன்பாக விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பக்தர் கள் அளித்த புகார்களின் அடிப்படையில் அதிகா ரிகள் நடத்திய சோதனை யில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன பிரசா தங்களை மனுதாரர் பக்தர்களுக்கு விற்பனை செய்திருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந் துள்ளது.
அறநிலைய துறைக்கு அதிகாரம்:

அதன்பேரிலேயே மனுதார ருக்கு வழங்கப் பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத் துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுத்துள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை. கோயில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து முறைப் படுத்தவும், அவற்றின் மீது நட வடிக்கை எடுக்கவும் அற நிலையத் துறை அதிகா ரிகளுக்கு அதிகாரம் உள் ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *