கொல்கத்தா, ஏப். 20- மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் நடந்த தேர்தல் பேரணியில் முதல் அமைச்சர் மம்தா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மாநில காவல்துறையினரை முற்றிலுமாக நிராகரித்து நீங்கள் எப்படி தேர்தலை நடத்த முடியும்? மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடாது என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியா? ஒன்றிய அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர் கூட அதன் பலனைப் பெற முடியாது.
ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது. நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் பா.ஜ.கவினர் உங்கள் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறிப்பார்கள். நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.
பா.ஜனதா பொய்களை
அள்ளி வீசியது – அகிலேஷ்
லக்னோ, ஏப். 20- இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரச்சாரம் மேற் கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர் கட்சியாகும். மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது. பா.ஜனதா திரும்பத் திரும்ப சொல்லு வதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது. இவ்வாறு அகி லேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம்?
கோவையில் சிக்கிக் கொண்ட பா.ஜ.க.வினர்
கோவை, ஏப். 20- தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சாதகமான மிகப்பெரிய அலை அடித்த போதிலும், அதை உணர்ந்து கொள்ளாத கோவை பாஜகவினர், எப்படியாவது அண்ணாமலைக்கு கூடுதல் வாக்குகள் வாங்கிவிட வேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள். கோவை கவுண்டம்பாளையம் வார்டு 15இல் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவோடு இரவாக ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்து வசமாக சிக்கிக் கொண்டார்கள். பிரச்சினை பெரிதாகிவிடுமோ என் றெண்ணி, கையில் வைத்திருந்த பணம், வாக்காளர் பட்டியல், பாஜகவின் பரப்புரை காகிதங்கள் ஆகியவற்றை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.