திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் சாதனை

Viduthalai
2 Min Read

அரசியல்

திருச்சி, செப். 15- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 12.9.2023 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக பாரதியார் நாள் மற்றும் சுதந்திர நாள் விளையாட்டு விழாவை முன்னிட்டு  மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டன.

திருவெறும்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட் டிகளில், திருச்சி, பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக் கங்களும் பெற்று சாதனை படைத் துள்ளனர். 19 வயதிற்கு உட்பட் டோருக்கான கோலூன்றித் தாண் டுதல் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அரிஅரன்  தங்கப் பதக்கமும், அரிஷ்குமார் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவர் கள் ஷைபுல் அஜ்மான் ஜெய்லானி வெள்ளிப் பதக்கமும், சிறீசரண் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

19  வயதிற்குட்பட்டோருக்கான தட்டு எறிதல் போட்டியில் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவர் ராகுல் வெள்ளிப் பதக்கம் வென்றார். 17 வயதிற்குட்பட்டோருக்கான தட்டு எறிதல் போட்டியில் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவர் ரஞ்சித் ராஜா வெண்கலப் பதக்கம் வென்றார். 19 வயதிற்குட்பட்டோ ருக்கான ஈட்டி எறிதல் போட் டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அரிஅரன் வெண்கலப் பதக்கம் வென் றார். 

17 வயதிற்குட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பதி னோராம் வகுப்பு மாணவர் தேவ குரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.  நீளம் தாண்டுதல் போட்டியில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பதினோராம் வகுப்பு மாணவர் தனுஷ் வெள்ளிப் பதக் கம் வென்றார். 17 வயதிற்குட்பட் டோருக்கான மும்முறை தாண்டு தல் போட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அப்துல் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.  17 வயதிற்குட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பதி னோராம் வகுப்பு மாணவர் வசந்த் வெண்கலப் பதக்கம் வென்றார். 17 வயதிற்குட்பட்டோருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் தர்ஷன், அப்துல் மாலிக், ஷைபுல் அஜ்மான் ஜெய் லானி, பிரகாஷ் ஆகியோர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 19 வயதிற்குட்பட்டோருக்கான தடை தாண்டும் ஓட்டப் போட் டியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அரிஅரன் தங்கப் பதக் கம் வென்றார். இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று மாவட்ட அளவிலான போட்டி களில் பங்கேற்க தகுதி பெற்ற மேற்கண்ட மாணவர்களையும் , பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கள் செல்வி.காயத்ரி, செல்வன். கோகுல் ஆகியோரைப் பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா அவர் களும், இருபால் ஆசிரியர்கள் மற் றும் அலுவலகப் பணித் தோழர் களும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *