சீர்காழி நகர கழகத் தலைவர் க.சபாபதி மறைவு – உடற்கொடை கழகப் பொறுப்பாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் இறுதிமரியாதை

Viduthalai
1 Min Read

சீர்காழி, ஏப்.20- சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான க. சபா பதி அவர்கள் 17-.04.-2024 அன்று மறைவுற்றதை ஒட்டி 18.-04.-2014 அன்று காலை மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் வீரவணக்கம் செலுத் தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் கி.தளபதிராஜ், மாவட்ட காப் பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட பக. தலைவர் இரெ.செல்லதுரை, சீர்காழி ஒன்றியத் தலைவர் ஆ.ச. சந்திரசேகரன், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், செயலா ளர் அ. சாமிதுரை, மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, இளை ஞரணித் தலைவர் க.அருள்தாஸ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், கொள்ளிடம் ஒன் றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், பகுத்தறிவாளர் கழக தலைவர் இளங்கோவன், மயிலாடுதுறை ப.க.தோழர் மதிவாணன், கொக் கூர் இளஞ்சேரன், மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். அதனை அடுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன் னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனி வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இராமலிங்கம், மக்கள் அதி காரம் ஸ்டாலின், தமிழர் தேசிய முன்னணி சுகுமாறன், மேனாள் இராணுவ வீரர் முனுசாமி, செல்வராணி, விழி உடற்கொடை ஊக்குநர் இராமச்சந்திரன் ஆகி யோர் உரையாற்றினார்.
தோழர் சபாபதியின் உடல் சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அவரது விழிகள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *