கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

20.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழ்நாட்டில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வன்முறை. வாக்கு எந்திரங்களுக்கு தீ வைப்பு. துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவதும், அதை காவல்துறையினர் அமைதியாக வேடிக்கை பார்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடு எதிர்கொள்ளும் முதல் மற்றும் மிகப்பெரிய பிரச்சினை அதன் வேலைவாய்ப்பு நிலைமை. வழக்கமான இந்தியர் மிகவும் இளமையாக இருக்கிறார், சராசரி வயது சுமார் 28 ஆண்டுகள் என்கிறார் பேராசிரியர் அமிர்தயா லாகிரி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*’அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து பேசும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’; பாஜகவை விட நிதிஷ் குமார் ஆபத்தானவர்: பீகார் பேரணியில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே அறிக்கை
தி இந்து:
*’மோடியிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஒரே உத்தரவாதம், அவருடைய வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்படும் என்பது தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கிண்டல்.
* வாக்குகளை பெறுவதற்கு பாஜக “ஒரு பிரச்சி னையை” (மதம் – கோவில்) பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *