கடவுளுக்கு ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்வது? இப்பொழுது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வசதியின்றித் தவிக்கிறார்களா – இல்லையா? இவ்வாறு நாடு வருந்தும் சமயத்தில் கடவுளுக்கு ஏன் வருடம் ஒரு திருமணம் செய்வது? சென்ற வருடம் செய்து வைத்த திருமணம் என்னவாயிற்று? இதைக் கேட்டால் நாத்திகமா? சென்ற ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் பணம் கேட்ட ஒருவன் இந்த ஆண்டும் திருமணத்துக்கென்று பணம் கேட்டால் சென்ற ஆண்டுத் திருமணம் என்ன ஆயிற்று என்று கேட்க மாட்டோமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1298)

Leave a Comment