பெரியாரைப் பின்பற்று!

1 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன், 

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

அரசியல்

சனாதன

சர்ப்பம்

சீறுகிறது.

ஆட்சி அதிகார

அரண்மனையில்

துப்பாக்கி

சத்தம்.

சனாதனமென்றால்

மாற்றம் கூடாதாம்!

மாற்ற மொன்றே

மாறாதது என்பது

இயற்கையின்

சட்டம்.

மனுவாதிகளுக்குத்

தெரியாதா?

தெரியும்தான்,

ஆதிக்கத் தேனை

ருசித்த நாக்குகள்

அடங்குமா?

ஒன்றை மட்டும்

உணர வேண்டும்.

ஒரு நூற்றாண்டு

வேட்டுச் சத்தம்

வெடிப்பது

தமிழ் மண்ணில்!

‘இந்தியா’தான்

வந்து விட்டதே!

புரியவில்லையா?

புயற்காற்றாம்

சுனாமி

பெரியார் என்னும்

பெருங்கடலில்

மய்யம் கொண்டு

வீசப் போகிறது.

வடக்குத்

திசைநோக்கி,

திராவிடம்

என்றால் திணை

அஃறிணையல்ல!

அல்லது அகற்றி

அறமது செய்வது!

ஆறறிவை அடைக்கும்

தாழ்ப்பாளை உடைப்பது

அனைவருக்கும்

அனைத்தும்

என்னும்

தாய்ப்பால் மருந்து

தன்மான உணர்வுக்கு

தத்துவ விருந்து

சமூக நீதிக்கு

திரியின்

விளக்கு!

பெரியாரைப்

பின்பற்று

திறவு கோல்

ஆங்கே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *