சேலம் அல்லிகுட்டை பாண்டியன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

Viduthalai
2 Min Read

சேலம்,ஏப்.19- சேலம் மாவட்ட செய லாளர் பா.வைரம், ஒசூர் மாவட்ட கழக தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றிச்செல்வன் ஆகியோரது தந் தையார் சேலம் அல்லிகுட்டை பெ.பாண் டியன் வயது முதிர்வின் காரணமாக (வயது 82) 16.04.2024 அன்று அதிகாலை 3 மணி அளவில் மறைவுற்றார்.
செய்தி அறிந்து கழகத் தோழர் களும், தோழமை கட்சியினரும் வருகை தந்து மறைந்த பாண்டியன் உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் செலுத் தினர். செய்தி அறிந்து கழக தலைவர் ஆசிரியர், பொதுசெயலாளர் வீ.அன்புராஜ் ஆகி யோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைரம், வெற்றி செல்வன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் தலைமையில் இரங்கல் கூட் டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க.நா.பாலு, கழக காப் பாளர் சி.சுப்பிரமணியம், நாமக்கல் மாவட்ட தலைவர் ஆ.கு.குமார், ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மேட் டூர் மாவட்ட தலைவர் க.கிருஷ்ண மூர்த்தி, குமாரபாளையம் ச.சரவணன், ஓமலூர் ஒன்றிய செயலாளர் சவுதரம், தாதாபட்டி தலைவர் இராவணபூபதி, செயலாளர் வீர மணி, அம்மாபேட்டை பகுதி தலைவர் இமயவரம்பன், செயலா ளர் குமாரதாசன், மாவட்ட வழக்குரை ஞர் அணி அமைப்பாளர் செல்ல குமார், மாவட்ட தொழிலாளரணி தலைவர் கணேசன், சூரமங்கலம் பகுதி தலைவர் பரமசிவம், செயலாளர் போலீஸ் ராஜூ, பேங்ராஜூ, உறவினர்கள் மெர்சி ஆஞ்சலாமேரி, சண்முகசுந்தரம், ரத்தினவேல், மோகன் ஆகியோர் இரங்கலுரையாற் றினர்.

இந்நிகழ்வில் ஒசூர் மாவட்ட செய லாளர் மா.சின்னசாமி, மகளிர் பாசறை மாவட்ட அமைப் பாளர் கோ.கண்மணி, மேனாள் வழக்குரைஞர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி, சேலம் பொன்னமாப்பட்டி பகுதி திமுக செயளாலர் கேபிள் ராஜன், திமுக கோட்ட செயலாளர்கள் லோகு, மணிவண்ணன், சவுந்தராஜன், அம்மா பேட்டை தி.மு.க. பகுதி பிரதிநிதி சத்தி வேல், திராவிட இயக்க தமிழர் பேரவை சுந்தரவதனம், சேலம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலை வர் வீரமணிராஜூ, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் ஜெ.கருணாகரன், மேட்டூர் நகர கழக தலைவர் கலையழகன், செயலாளர் ராஜேந்திரன், சக்திவேல், டேவிட், ஆனந்தி, பாலு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மறைந்த பாண்டியன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தபின் மறைந்த பாண்டியன் உடல் எந்த வித மூட சடங்குமின்றி கொள்கை முழக்க மிட்டு பெண்களால் உடல் சுமந்து செல்லப்பட்டு அமரர் ஊர்தி மூலம் காகா பாளையத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டபட் டது.

இறுதி நிகழ்வை ஒருங்கி ணைத்து சேலம் மாநகர செயலாளர் சி.பூபதி நடத் தினர். நிறைவாக பாண்டியன் குடும்பத் தினர் சார்பில் அவரது மாகன் சேலம் மாவட்ட செயலாளர் பா.வைரம் தனது தந்தையார் மறைவு செய்தி அறிந்து தொலைபேசி வழியாக எங்களை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர், பொதுச்செயலாளர் அன்புராஜ், மற்றும் நேரில் வந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி எனது தந்தையார் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி தெரி வித்து கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *