சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள் (வயது 85) நேற்று (17.4.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திருமதி. தமிழரசி அவர்களோடு வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தம் செய்து கொண்ட சபாபதி அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததன் நினைவாக விஜயந்தா, விக்ராந்த் என்று தம் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினார்.
பணி ஓய்வுக்குப் பின் இறுதிவரை தன்னை திராவிடர் கழகத்தில் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். ஒரு மகளுக்கு வாலன்டினா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கட்டுப்பாடு மிக்க கழகத் தோழராகப் பணியாற்றியவர்.
அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.4.2024
குறிப்பு: அவரது இறுதி ஊர்வலம் இன்று (18.4.2024) காலை 10 மணி அளவில் சீர்காழி பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு – சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு உடற்கொடை அளிக்கப் படுகிறது.