பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி க.சபாபதி மறைவிற்கு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள் (வயது 85) நேற்று (17.4.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திருமதி. தமிழரசி அவர்களோடு வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தம் செய்து கொண்ட சபாபதி அவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததன் நினைவாக விஜயந்தா, விக்ராந்த் என்று தம் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டினார்.

பணி ஓய்வுக்குப் பின் இறுதிவரை தன்னை திராவிடர் கழகத்தில் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். ஒரு மகளுக்கு வாலன்டினா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கட்டுப்பாடு மிக்க கழகத் தோழராகப் பணியாற்றியவர்.

அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
18.4.2024 

குறிப்பு: அவரது இறுதி ஊர்வலம் இன்று (18.4.2024) காலை 10 மணி அளவில் சீர்காழி பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு – சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவமனைக்கு உடற்கொடை அளிக்கப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *