மக்கள் நீதி – வளரும் சமூகம் Lokniti – CSDS என்ற அமைப்பு 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில் 27% பேர் வேலையின்மை தான் முக்கியப் பிரச்சினை என்றும்,
55% பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்றும்,
ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பா.ஜ.க ஆட்சியின் முடி வுக்கான கீழிறக்கம் ஆரம்பம் ஆகி விட்டது என்று தெரிய வந்துள்ளது.
அதிகரித்து விட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகு பாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சி படுதோல்வி அடைந்து விட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.
“சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என்று முதல் அமைச்சர் சொல்லுவது கவனிக்கத்தக்கது.
வேலையின்மை என்பது தலை விரித்தாடுகிறது. ஒன்றிய அரசின் துறைகளுள் 75 விழுக்காடு இடங் களை உயர் ஜாதியினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலையில் உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடு (ணிகீஷி) இட ஒதுக்கீடாம்.
ஒன்றிய அரசு துறைகளில் குரூப் ‘ஏ’ பதவிகளில் உயர் ஜாதியினர் 69% – எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி.யினர் 31 விழுக்காடு – குரூப் ‘பி’ பதவிகளில் உயர் ஜாதி யினர்களின் நங்கூரம் 65% – எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி.யினர் 35% – அரசு வங்கிகளில் பொது மேலாளர் பதவிகளில் உயர் ஜாதியினர் 422 (94%) – எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி. 28(6%) – துணை மேலாளர் பதவிகளில் உயர் ஜாதியினர் 1108 (91%) – எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி. 107 (9%) – காப்பீட்டுத் துறையில் பொது மேலாளர் பதவிகளில் உயர் ஜாதியினர் 76(84%) – எஸ்.ஸி., எஸ்.டி. ஓ.பி.சி. 15 (16%) – துணை மேலாளர் பதவிகளில் உயர்ஜாதியினர் 344 (87%) – எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி. 52 (13%).
இந்த அநியாய அக்கிரமத்தை எங்குப் போய்ச் சொல்லிக் கட்டி அழுவது! இவ்வளவுக்கும் இந்த உயர்ஜாதியினரின் எண்ணிக்கை 15% எஸ்.ஸி.,எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவு மக்களோ 85 விழுக்காட்டினர்.
இந்தியாவில் சமூகநீதியின் இலட்சணம் இந்த யோக்கியதையில் தான் உள்ளது. வெள்ளைக்காரர்கள் வெளியேறிய இந்தியாவில் ‘டெமாக்கிரசி (ஜனநாயகம்) இருக்காது; மாறாக ‘பிராமினோகிரசி’ (பார்ப்பன நாயகம்) தான் இருக்கும் என்ற தந்தை பெரியாரின் கணிப்பை (1925இல்) எண்ணிப் பாருங்கள்.
கருத்துக் கணிப்பில் 2024 மக்களவைத் தேர்தலில் வேலை வாய்ப்பின்மை என்ற பிரச்சினை 27 விழுக்காடாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒழுங்கான முறையில் எடுத்திருந்தால் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். ‘ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகக் கூறினீர்களே – அந்த வாக்குறுதி என்னாயிற்று?’ என்று கேட்டபோது, இளைஞர்கள் ‘பகோடா விற்க லாமே’ என்று சொன்னவர் தானே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இளைஞர்கள் அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்து முதன் முதலாக வாக்களிக்கும் இளைஞர்களே, இந்த மோடி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நீங்கள்தான்! ஆம், நீங்கள்தான்!!