கழகக் களத்தில்…!

Viduthalai
4 Min Read

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் 145ஆவது 

பிறந்த நாள் விழா

பையூர்: காலை 10 மணி * இடம்: பையூர் பெரியார் சிலை * தலைமை: பெ.மதிமணியன் (மேனாள் மாவட்டத் தலைவர், கிருஷ்ணகிரி) * முன்னிலை: பெ.செல்வேந்திரன் (ஒன்றிய செயலாளர், காவேரிப்பட்டணம்), சி.இராசா (தலைவர், பையூர்), வே.சரவணன் (செயலாளர், பையூர்) * காலை 9.30 மணிக்கு பையூர் மண்டல ஆராய்ச்சிப் பண்ணையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். அனைத்து கட்சி பிரமுகர்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர் * இவண்: பையூர் கிளை, கிருட்டினகிரி மாவட்டம்.

– – – – –

ஓசூர்: மாலை 4.30 மணி * இடம்: தந்தை பெரியார் சதுக்கம், உள்வட்டச் சாலை (ரிங் ரோடு), ஓசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: சிவந்தி அருணாசலம் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), கோ.கண்மணி (மா. மகளிர் பாசறை தலைவர்) * வாழ்த்துரை: பேராசிரியர் கு.வணங்காமுடி (திராவிடர் இயக்க சிந்தனையாளர்), எஸ்.ஏ.முரளிதரன் (காங்கிரஸ்), வெற்றி ஞானசேகர் (திமுக), எம்.கே.மாதையன் (சிபிஅய்எம்), சி.பி.ஜெயராமன் (சிபிஎம்), ஈழம் குமரேசன் (மதிமுக), எம்.ராமச்சந்திரன் (விசிக), எஸ்.தினேஸ் (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), சி.சபரி (த.வா.கட்சி), க.ரா.தமிழரசன் (த.தே.குடியரசு இயக்கம்), ஒப்புரவாளன் (தமிழ்நாட்டு கல்வி இயக்கம்) * நன்றியுரை: பெ.சின்னராசு (மாநகர செயலாளர்) * கழக கொடியேற்றல்: காலை 9 மணி முதல் 10 மணி வரை – பெரியார் சதுக்கம் (ரிங் ரோடு), ராய்நகர், அசோக் பில்லர், பெரியார் படிப்பகம், பெரியார் சமத்துவபுரம் * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஓசூர் (கழக) மாவட்டம்.

– – – – –

குடியாத்தம்: சமூக நீதி நாள் ஊர்வலம் * காலை 10 மணி * இடம்: கொண்ட சமுத்திரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் * தலைமை: இரா.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: வி.சடகோபன் (கழக காப்பாளர்) * முன்னிலை: சி.சாந்தகுமார் (குடியாத்தம் நகர தலைவர்) * ஊர்வலம் துவக்கி வைப்பவர்: வி.அமலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்) * பெரியார் சிலைக்கு மரியாதை செய்பவர்கள்: எஸ்.சவுந்தர்ராஜன் (திமுக குடியாத்தம் நகர செயலாளர்), என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம் ஒன்றிய செயலாளர், திமுக) * நன்றியுரை: வி.மோகன் (குடியாத்தம் நகர அமைப்பாளர்) * ஏற்பாடு: குடியாத்தம் நகர திராவிடர் கழகம்.

– – – – –

பாபநாசம்: * காலை 10 மணிக்கு பாபநாசம், அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து புறப்பட்டு திருப்பாலைத்துறையில் உள்ள தந்தை பெரியார் முழு உருவச் சிலைக்கு பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையில் மாலை அணிவிக்கப்படும். பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள நகரம், கிளைக் கழக ஊர்களில் கொடியேற்றுதல் நடைபெறும். அனைத்து கழக தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம் * மாலை 4 மணிக்கு அய்யம்பேட்டை தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் தலைமையில் மாலை அணிவிக்கப்படும் * ஏற்பாடு: பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம்.

– – – – –

வேப்பிலைப்பட்டி: தந்தை பெரியார் சிலைக்கு மாலை: சிந்தை மு.இராசேந்திரன் (மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்)  * அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * இப்படிக்கு: திராவிடர் கழகம், வேப் பிலைப்பட்டி, அரூர் கழக மாவட்டம்.

– – – – –

கல்லக்குறிச்சி: கல்லக்குறிச்சி கழக மாவட்ட ப.க. – தி.க சார்பில் கல்லக்குறிச்சி மந்தைவெளியில் அமைந்துள்ள தந்தைபெரியார் சிலையில் இருந்து காலை 9மணியளவில் ஊர்வலமாக காந்தி ரோடு, நான்கு முனை சந்திப்பு,சேலம் நெடுஞ்சாலை,கடைவீதி வழியாக மந்தைவெளி வந்து சிலைக்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கி துணிப்பந்தல் அமைத்து ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் நடைபெற உள்ளது. * ஊர்வலத் தலைமை: எஸ்.இ.ஆர் திராவிடப்புகழ் (மாநில திராவிட மாணவர் கழக துணைசெயலாளர்) * முன்னிலை: ஏ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலை வர்), முனியன் (மாவட்ட மாணவரணி தலைவர்), கி.முத்து வேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கழக தோழர்கள் சரியான நேரத்திற்கு வந்து விழாவில் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் * அழைத்து மகிழும்: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்), ச.சுந்தர ராசன் (மாவட்ட கழக செயலாளர்), ம.சுப்பராயன் மாவட்ட காப்பாளர், கல்லக்குறிச்சி மாவட்டம்.

– – – – –

மதுரை: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளில் மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட தொடக்கக் நிகழ்வாக செப்டம்பர் 17 காலை 9-30 மணிக்கு தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகில் சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டு கிறோம் * வருகை விழையும்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்).

– – – – –

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா வருகின்ற 17.9.2023 ஞாயிற்று கிழமை காலை 9.00 மணிக்கு காவேரிப்பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சிகளுடன் ஊர்வல மாக சென்று பாலக்கோடு பிரிவு சாலையிலுள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப் பினர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்படுகிறது * கழகப் பொறுப்பாளர் களும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் * இவண்: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்), பெ.செல்வேந்திரன், (ஒன்றியச் செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், காவேரிப்பட்டணம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *