மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், கழக காப்பாளர் இரா.காசி, கழக மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் சந்தித்து பயனாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுக்கும் ஒவ்வொரு அறிக்கையினையும் படித்தால் போதும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் எனபெருமையுடன் குறிப்பிட்டார். அக்டோபர் திங்களில் பத்தமடை வருகைதரும் தமிழர்தலைவருக்கு நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.