அம்பேத்கர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடும் பி.ஜே.பி. ஜாதிவாரி கணக்கெடுப்பை தேர்தல் அறிக்கையில் கூறாதது ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

viduthalai
3 Min Read

சென்னை,ஏப்.15– “மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பாஜக கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார் கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாத பாஜக 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத் தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். ஒவ்வொரு மதத்துக் கும் இருக்கிற தனித்தன்மையை கடுமையாக பாதிக்கிற நடவடிக் கையாகும்.
அதேபோல, 28 மாநிலங்களில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத் தியமற்றதாகும். தற்போது நடை பெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட் டங்களாக நடத்தப்படுகிற நிலை யில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண் டாடுவோம் என்பது அப்பட் டமான இரட்டை வேடமாகும்.

ஏற்கெனவே ஆயுஷ்மான் திட் டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத் திட்டம் குறித்து தேர்தல் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறு கிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதி கமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டு கிற பாஜக, தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன் மூலம் தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது.
தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பாஜக, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக் கிறது. வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பாஜகவை எவரும் மறந்திட இயலாது.

மோடியின் உத்திரவாதம் நம் பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற் றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் அறிக்கையை அம் பேத்கர் பிறந்தநாளில் வெளியிட் டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண் ணிக்கையை ஜாதிவாரியாக கணக் கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பாஜக, அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

எனவே, மக்களின் நம்பகத்தன் மையை இழந்த பாஜகவின் தேர் தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வ மான கருத்துகள் எதையும் பாஜக கூறவில்லை.

இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக் கணிப்பார்கள். கடந்த தேர்தல்க ளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பாஜக தேர்தல் அறிக்கை வெளி யிட்டு அரங்கேற்றியிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *